சென்னையில் சிபிஐ ரெய்டு..! பிரபல வங்கியின் முன்னாள் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை | Chennai Raid

x

சென்னை கேகே நகர், லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். 70 வயதான இவர், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். ராதாகிருஷ்ணன் தான் பணியில் இருந்த காலத்தில் முறைகேடாக பல கோடி ரூபாய் கடன் வழங்கி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்த விசாகப்பட்டினம் சிபிஐ போலீசார், ராதாகிருஷ்ணனின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் ஹைதராபாத், விசாகப்பட்டினம் என மொத்தம் ஐந்து இடங்களில் சிபிஐ போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்