போதை ஊசியை செலுத்திக் கொண்ட இளைஞர் - உடல்நிலை மோசமாகி நேர்ந்த பரிதாபம்

x

சென்னை புளியந்தோப்பில், 26 வயது இளைஞர் ஒருவர் உடலில் போதை ஊசி செலுத்திக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் தீன தயாளன். இவர் மீது... காவல்நிலையங்களில் 9 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தீன தயாளன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு போதை மாத்திரையை கரைத்து அதனை ஊசி மூலம் தன் உடலில் இளைஞர் செலுத்திய நிலையில், திடீரென உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதை ஊசியை உடலில் செலுத்தி இளைஞர் உயிரிழந்த இந்த விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்