சென்னையில் ஊசி செலுத்திய பத்தே நிமிடம்..உயிரிழந்த முதியவர்..மக்களே உஷார்..! | Chennai | Doctor

x

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். சித்த மருத்துவம் படித்துள்ள இவர், அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். பெருமாள் சித்த மருத்துவத்துடன், ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர், உடல்நலக் கோளாறு காரணமாக, சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது அந்த முதியவருக்கு சித்த மருத்துவரான பெருமாள் ஊசி செலுத்தியுள்ளார். ஆனால் ஊசி செலுத்திய 10 நிமிடத்தில் முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆங்கில மருத்துவம் பார்த்தது தொடர்பாக, ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்