#Breaking|| சென்னையை உலுக்கிய திமுக நிர்வாகி கொலை.. 17 வயது ரவுடி சரண்.. யார் அந்த செல்லா..? அதிர்ச்சியில் போலீஸ்

x

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன். இவர் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராக இருந்து வந்தார். இவர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக வண்டலூர் மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக காரில் வந்த நபர்கள் இவரது காரை வழிமறித்து கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி காரில் இருந்த ஆறா அமுதனை சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக மண்ணிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஐந்து பேரில் ஒருவர் மைனர் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்