பீர் பாட்டிலால் ரவுடி அடித்துக் கொலை - சென்னையில் பரபரப்பு

x

சென்னை வியாசர்பாடியில், பீர் பாட்டிலால் ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கூட்ஸ் செட் ரோடு உட்புறம் உள்ள முட்புதரில், தலையில் பலத்த காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார், கழுத்தில் பீர் பாட்டிலை உடைத்து குத்தப்பட்ட நிலையில், அந்த நபர் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உயிரிழந்த நபர் வியாசர்பாடியை சேர்ந்த நவீன் குமார் என்கிற வாழைப்பழ அப்பு என்பது விசாரணையில் உறுதியானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்