"என்னை மாதிரி... யார் தாலியும் அறக்கூடாது"சென்னையில் பட்டப்பகலில் துடிக்க துடிக்க.. சரமாரியாக வெட்டிய போதை ஆசாமிகள்

x

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சக்திவேல் - ஷோபா தம்பதிக்கு, குழந்தைகள் கிடையாது. கடந்த 3ம் தேதி இரவு 7 மணிக்கு, புளியந்தோப்பு டிம்ப்லர்ஸ் ரோடு பகுதியில் உள்ள கடைக்கு, சக்திவேல் டீ குடிக்க வந்தார். அப்போது அங்கு போதையில் இருந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்தி வேலை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். தொடர்ந்து 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்ப​ட்ட நிலையில், சக்திவேல், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்