சென்னையில் வீடு புகுந்து இளைஞர் சரமாரி வெட்டிக் கொலை - அலறல் சத்தம் கேட்டு ஓடிய மக்கள்

x

ஆர்.கே.நகரில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வந்த லொட்டை என்கிற ஆனந்த் மீது 13 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று அவருடைய மனைவி ரோஜா அருகில் உள்ள கடைக்குச் சென்ற நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், ஆனந்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ஆனந்த் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ரோஜா, கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்