தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட விவகாரம் "3 மாதங்களில்.."- சென்னை ஐகோர்ட் அதிரடி

x

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு இழப்பீடு வழங்கவும், மேட்டூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட நபரின் தாய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முறையான சிகிச்சை வழங்கப்பட்டதாக விசாரணைக்குழு அறிக்கை அளித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் சமர்ப்பித்த வீடியோக்களை சுட்டிக்காட்டி, சிறுவனுக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என்றும், அதனால் தான் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறி, 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 6 வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது 22 வயதாகும் நிலையில், கல்வித் தகுதி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களுடன் உரிய வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்திய நீதிபதி, இதை பரிசீலித்து உரிய அரசு வேலை வழங்குவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்