பிரபல தனியார் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து.. சென்னையில் பரபரப்பு

x

காதல் விவகாரத்தில், கல்லூரி மாணவர் ஒருவரை கல்லூரி வாசலில் வைத்தே இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னை, வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் நிலையில், சம்பவத்தன்று கல்லூரி இருந்து வெளியே வந்த விக்னேஷை இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், தன்னுடன் படித்து வந்த மாணவி ஒருவரை விக்னேஷ் காதலித்து வந்ததாகவும், இதில் இருவரும் பிரிந்த நிலையில், மீண்டும் தன்னை காதலிக்க சொல்லி இளைஞர் வற்புறுத்தியதால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்