சென்னை சென்ட்ரலில் பரபரப்பு - போலிஸுக்கு அடுத்தடுத்து `ஷாக்' கொடுத்த நபர்

x

சென்னை சென்ட்ரலில், செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, ரயில்வே போலீசார் கைது செய்தபோது, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தை சேர்ந்த நாசர் இப்ராகிம் என்பவர், நடைமேடையில் டிக்கெட் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் என்பவர் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பாரத் நாயக்கை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, மறைத்து வைத்திருந்த பிளேடால், பாரத் நாயக் தனது கழுத்தை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் லேசான காயத்துடன் அவரை மீட்டு அவரை போலீசார் விசாரித்தபோது, மீண்டும் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்