சென்னை, நெல்லை, நாகர்கோவில்... பரபரக்கும் ரெய்டு

x

ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த விவகாரத்தில், ஐயப்ப கார்த்தி என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்...

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்து 400 ஏக்கர் இடத்தை மோசடியாக விற்ற விவகாரத்தில், இழந்த பணத்தை மீட்டு தருமாறு பொதுமக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தென்னக மக்கள் இயக்கத் தலைவர் ஐயப்ப கார்த்திக் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர். நெல்லை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் சோதனை நடந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பூட்டி இருந்ததால் அதிகாரிகள் வாசலில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்