சாலையில் தறிகெட்டு ஓடிய கார் - படுகாயம் அடைந்த 2 பேர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..

x

சென்னை அம்பத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டியவரின் மனைவி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன் தனது மனைவியுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி வாகனங்கள் மீதும், எதிரே சைக்கிளில் வந்த மாநகராட்சி ஊழியர் மீதும் மோதியது. இதில் சைக்கிளில் வந்த நபருக்கு இடதுகை தோல்பட்டை எழும்பு முறிந்தது. விபத்து குறித்து, அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்