ரத்தான மின்சார ரயில்கள் - சென்னையை திணறடித்த மக்கள் கூட்டம்

x

பராமரிப்பு பணிகளுக்காக, சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யபட்டதால், செங்கல்பட்டு, தாம்பரம் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து போலீசார், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்