10 ரூபாயால் நடந்த விபரீதம் - வீட்டை விட்டு வெளியேறிய அண்ணன்.. பாசத்தால் தங்கைக்கு நடந்த சோகம்

x

சென்னை பழைய பல்லாவரத்தில் 10 ரூபாய்க்காக சண்டை போட்டுச் சென்ற அண்ணனுக்காக மனமுடைந்து தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... சாரா நகரில் பெற்றோருடன் விட்டல், மலர்விழி என்ற அண்ணன் தங்கை வசித்து வந்துள்ளனர்.

மலர்விழி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்... மலர்விழியிடம் விட்டல் செலவுக்காக 10 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் மலர்விழி தர மறுத்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு, மலர்விழியிடம் "இனி உன்னிடம் பேசவே மாட்டேன்" என கூறி விட்டு விட்டல் வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது மலர் விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்... விட்டல் வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்... போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்