காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை.. சென்னையில் அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

x

சென்னை, பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க சங்க அரங்கத்தில், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தொடங்கி வைத்தார். புத்தகத்தின் முதல் விற்பனையை திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக்கொண்டார். மே 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கண்காட்சி, இரவு 9.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்