சென்னையில் விடிய விடிய நடந்த சம்பவம் - அச்சத்தில் மக்கள்.. பரபரப்பு

x

சென்னையில் இளைஞர்கள் சிலர் இரவில் பைக் ரேஸில் ஈடுபட போவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நள்ளிரவில் காமராஜர் சாலை, டிடிகே சாலை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். போக்குவரத்து காவலர்களைக் கண்டதும் சாலையின் எதிர் திசையில் அதிவேகத்தில் பைக்கினை ஓட்டி சென்று, சக வாகன ஓட்டிகளை இளைஞர்கள் அச்சுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர், பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் இளைஞர்களை, போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்