மாநகராட்சி ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்... சென்னையில் பயங்கரம்

x

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவர், ஆவடிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று சரஸ்வதிநகர் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறுவதாக கூறி, அங்கு மதுபோதையில் வந்த கும்பலை மாற்று பாதையில் செல்ல வலியுறுத்தியிருக்கிறார். இதில், அந்த கும்பலுடன் இப்ராஹிமுக்கு வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், உடனே சம்பவ இடத்திற்கு ஆட்களை வரவழைத்த கும்பல், இப்ராஹிமை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதில் வெட்டுபட்டு காயமடைந்த இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகளுடன் விசாரணை நடத்தி வரும் போலீசார், மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்