நடுரோட்டில் டிராபிக் நேரத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ..!

x

சென்னை தாம்பரத்தில், மதுபோதையில் ஆட்டோவை இயக்கி பயணிகளை அச்சுறுத்திய ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலையூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ஆட்டோ, பொதுமக்கள் மீது மோதியும், பல்வேறு வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தியும் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், தாம்பரம் ரயில் நிலையம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் மடக்கி பிடித்த போது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர், ஆட்டோவை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்