கேட்பாரற்று கிடந்த மர்ம பைகள்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

x

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் கேட்பரற்று கிடந்த 2 பைகளால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விரைந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் மோப்ப நாயுடன் சென்று சோதனை செய்தனர். சோதனையில், பைகளில் துணிகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் விமானத்தில் ஏற வந்த பயணிகள் யாராவது விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்