சைக்கிள் ஓட்டி ஓட்டி வீடு மறந்த சிறுவன்...மீண்டும் மீண்டும் சொன்ன ஒரு வார்த்தை - இரவில் சென்னையில் நடந்த அதிர்ச்சி

x

சென்னை பூந்தமல்லி அருகே, சைக்கிள் ஓட்டியபடி மாயமான சிறுவனை, 2 மணி நேரத்தில் மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பேருந்து நிலையம் அருகே, சைக்கிளில் வந்த 5 வயது சிறுவன் ஒருவன், தனது வீடு எங்கு உள்ளது என்று தெரியாமல், அங்கும் இங்குமாக சுற்றியபடி இருந்துள்ளான். இதனைப் பார்த்த ஆட்டோ ஓட்டுனர்கள், அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது, தாத்தா என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையும் சொல்லாததால் திகைத்து நின்றனர். அதனைத் தொடர்ந்து, சிறுவன் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுவனை பத்திரமாக மீட்ட நிலையில், இதுதொடர்பாக அனைத்து காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பயனாக, ஒருவர் தனது மகனை காணவில்லை என, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருந்தார். அப்போது, சிறுவனின் அடையாளம் குறித்து அந்த தம்பதி கூறியபோது, தங்களது மகன்தான் என உறுதியானது. அதனைத் தொடர்ந்து, சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்