#JUSTIN || செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பில் திடீர் மாற்றம்

x

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 1500 கன அடியில் இருந்து ஆயிரம் கன அடியாக குறைப்பு

மழை விட்டதன் காரணமாகவும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் 1500 கன அடியாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது

ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியில் 22.64 அடியாகவும், நீர் வரத்து 1000 கன அடியாக உள்ளது.

மழை விட்டு ஒரு வாரம் ஆன நிலையில் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்