செம்பரம்பாக்கம் ஏரியில் உச்சகட்ட விபரீதம்... சுற்றி பார்க்க சென்ற இடத்தில நேர்ந்த சோகம் - பலியான நண்பர்கள் - சென்னையில் அதிர்ச்சி
போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலை சேர்ந்த ரிஷிகேஷ், சாலிகிராமத்தை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயில இருந்தனர். ஒருவருக்கு அரசு மருத்துவ கல்லூரியிலும், மற்றொருவருக்கு தனியார் கல்லூரியிலும் சீட் கிடைத்த நிலையில், நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றுள்ளனர். அப்போது, ஏரி நீரில் இறங்கிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story