கோவிந்தா, கோவிந்தா என முழக்கம்..பெருமாள் மீது விழுந்த சூரிய ஒளி.. - ஒருமுறை நடக்கும் அதிசயம்

x

வேலூர் மாவட்டம் மீனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நடைபெற்றது. மீனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் மேற்கு திசை நோக்கி இருந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்றாம் வாரத்தில், சூரியன் அஸ்த மிக்கும் சமயத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது. அதன்படி, இந்தாண்டு மூலவர் வெங்கடேச பெருமாள் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கண்டுகளித்து கோவிந்தா, கோவிந்தா என முழங்கி பெருமாளை வழிபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்