தென் மாவட்டங்களில் களமிறங்கும் மத்திய குழு.. | Southern Districts | Central Team

x

தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்திய ஆய்வு குழு அதிகாரிகள், விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றுள்ளனர்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கசாலி வழங்க கேட்கலாம்...

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள, மழை வெள்ள சேதங்களை நேரடியாக ஆய்வு செய்வதற்காக, மத்திய குழுவை சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள், அட்வான்ஸ் குழுவாக, இன்று டெல்லி மற்றும் ஹைதரபாத்தில் இருந்து, சென்னை வந்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியில் வராமலேயே, இன்று இரவு 8:20 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மதுரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த அட்வான்ஸ் குழு, தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக, வந்துள்ள அட்வான்ஸ் மத்திய குழு என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் உயர் அதிகாரியான கர்னல் கே பி சிங், டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, இன்று மாலை 4:45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அவர் விமான நிலையத்தை விட்டு வெளியில் வராமல், விஐபி ஓய்வு அறையில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை இயக்குனர் டாக்டர் கே. பொன்னுசாமி, ஹைதராபாத்தில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இன்று மாலை 5:50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அவரும் வெளியில் வராமல் விமான நிலைய ஓய்வறையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று இரவு 8:20 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இந்த உயர் அதிகாரிகள் இருவரும் மதுரை புறப்பட்டு சென்றனர்.

நாளை இவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்