ஒரு கையில் செல்போன்.. மறு கையில் ஸ்டியரிங்.. அதே கையால் ஹாரன் - சாகசம் செய்த ஓட்டுநர்

x

வேலூரில் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டிய ஓட்டுநரால் பயணிகள் பீதியில் உறைந்தனர்... ஒடுக்கத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே வாகனத்தை இயக்கினார்... ஒரு கையில் செல்போன்... மறு கையில் ஸ்டியெரிங்... அவ்வப்போது அதே கையை வைத்து ஹாரன் அடிப்பது என... சாகசம் செய்வதைப் போல் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரைக் கண்டு பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுபோல் விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்