திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு எதிராக வழக்கு

x

தேங்காய் உடைக்கும் இடம் மாற்றப்பட்டதை ரத்து செய்ய கோரிக்கை

கோயில் நிர்வாகத்தை பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையிலும், தூய்மையாக வைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விபூதி மற்றும் தேங்காய் உடைக்கும் இடம் மாற்றப்பட்டதை எதிர்த்து, வீரபாகு மூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையிலும், முருகன் கோயிலை தூய்மையாக வைத்துள்ளதாகவும், அதற்கு கோயில் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதில், கோயில் நடைமுறைகள், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும்,

விபூதி கொடுக்கும் இடம், சன்னிதியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி கொடுத்தால் கூட்ட நெரிசலை கட்ட படுத்த முடியும் என்றும் கூறினார்.

எந்த இடம் என்பதை மனுதார‌ர் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்ற நீதிபதி, விரிவான வாத‌த்திற்காக நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்