மேள தாளத்துடன் உலா வந்த அம்மன்.திடீரென புகுந்த கார்.தூக்கி வீசப்பட்ட பக்தர்கள்.. பரிதாபமாக பறிபோன உயிர்

x

காஞ்சிபுரத்தில், கோயில் திருவிழா ஊர்வலத்தில் கார் புகுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத்தெருவில், ஆடிமாதத்தையொட்டி, கருக்கினில் அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. நேற்றிரவு மாட்டு வண்டியில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது. இதில் புகைப்பட கலைஞர் வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். 8 பேர் காயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த செல்போன் காட்சிகளைக் கைப்பற்றி, ஓட்டுனர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்