ஒரே இடம்.. அடிக்கடி விபத்துகள்.. மின்னலாய் பறந்து கார்.. தூக்கிவீசப்பட்ட நபர்..

x

திருவண்ணாமலை மாவட்டம் வட இலுப்பை கூட்டு சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட இலுப்பை கூட்டு சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்கும்போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்து குறித்து கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்