அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து - 5 பெண்கள் உட்பட 7 பேர் காயம்

x

சென்னை திரிசூலம் பேருந்து நிறுத்தம் அருகே, அதிவேகமாக வந்த கார் மோதியதில், பேருந்துக்காக காத்திருந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்பவர், ஓட்டுனர் ரஞ்சித்துடன் நுங்கம்பாக்கத்தில் இருந்து பல்லாவரத்தில் உள்ள நண்பரை பார்க்க காரில் சென்றார். திரிசூலம் சிக்னல் அருகே காரை வேகமாக இயக்கியபோது, பேருந்து நிறுத்தம் அருகே காத்திருந்தவர்கள், சாலையைக் கடந்தவர்கள், ஆட்டோவில் வந்தவர்கள் ஆகியோரின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 5 பேர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து காரணமாக, திரிசூலம் ஜி.எஸ்.டி. சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார், கார் ஓட்டுனர் ரஞ்சித்தை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழப்பதாக பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்