கேப்டனின் பிடி மண்ணை இந்து முறைப்படி பூஜை செய்து கடலில் கரைத்த இஸ்லாமியர்

x

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிடிமண்ணை, தேமுதிக நிர்வாகிகள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கரைத்தனர். ராமநாதபுரம் தேமுதிக மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமையில், பூஜைகள் செய்து பிண்டங்கள் வைத்து அக்னி தீர்த்த கடற்கரையில் பிடிமண் கரைக்கப்பட்டது. தேமுதிக மாவட்ட செயலாளர் ஜின்னா இஸ்லாமியராக இருந்தாலும், இந்து மத முறைப்படி பூஜைகள் செய்து கடற்கரையில் நீராடி மண்ணை கரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்