போலாம் ரைட் - மீண்டும் தொடங்கிய போக்குவரத்து

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, பாலம் சரி செய்யப்பட்டதால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

திசையன்விளை வழுக்குப்பாலம் அருகே நந்தன்குளம் பகுதியில் பாலம் வேலை நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாற்று வழிச்சாலை, அண்மையில் பெய்த மழையால் பழுதடைந்தது. இதனால் திசையன்விளையிலிருந்து மன்னார்புரம் வழியாக திருநெல்வேலிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திசையன்விளையிலிருந்து மன்னார்புரம் வழியாக திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்