பிரபல தொழிலதிபர் வீட்டில் பயங்கர பிரச்சினை-வீட்டின் உள்ளே கதறி அழுத தாய், மகள்-மகன் செய்த கொடூர செயல் - சேலத்தில் பயங்கரம்..

x

சேலத்தில், சொத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவிடாமல், தாய் மற்றும் சகோதரியை, சொந்த மகனே வீட்டில் அடைத்து வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரபல தனியார் நிறுவனத்தின் சொத்துக்கள், அதன் வாரிசுதாரர்களான ரவிச்சந்திரன் மற்றும் ராமநாதனுக்கு அண்மையில் பிரிக்கப்பட்டது. அதில், ராமநாதன் குடும்பத்திற்கு திரையரங்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், துணிக்கடை, நகைக்கடை, பள்ளி மற்றும் கட்டுமான நிறுவனம் என அனைத்தும் ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. திரையரங்கு மற்றும் வீட்டை அபகரிக்கும் நோக்கில், ராமநாதனின் மகனான பிரசாந்த், அவரது சித்தப்பாவான ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சொத்து விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ராமநாதனின் மனைவி கீதா மற்றும் அவரது மகள் ரேகா ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், இருவரையும் அவரது மகன் பிரசாந்த் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றார். தாய் மற்றும் மகள் கதறி அழுததை அடுத்து, அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்