"அதிகாரிகள் ஓகே சொன்னால் பணி"...தொழிற்சங்கத்தினர் பரபரப்பு புகார்

x

சென்னையில் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்படும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு ஒருநாளைக்கு 800 ரூபாயும்,

பிற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 700 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பேருந்துகளை ஓட்டி காண்பித்து அதிகாரிகள் ஓகே சொன்னால் உடனடியாக பணி வழங்கப்படுவதாகவும் , சென்னையில் கடந்த சனிக்கிழமை முதல் 200 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணிமனைக்கும் குறைந்தபட்சம் 10 நபர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் தினக்கூலி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்