"பஸ் எப்போ கிளம்பும்?"...பயணியை திட்டி இறக்கி விட்ட ஓட்டுநர் - அடுத்த ஸ்டாப்பில் அரிவாள் வெட்டு

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள பசுக்கிடைவிளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ். பாபநாசம் - நெல்லை வழித்தட தனியார் பேருந்து ஓட்டுநரான இவரிடம், அம்பை கோவில்குளம் பகுதியை சுப்பிரமணி என்பவர் பேருந்து எத்தனை மணிக்கு புறப்படும் என ஓயாமல் கேட்டு கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், கடுப்பான ஓட்டுநர், சுப்பிரமணியை திட்டி அனுப்பிய நிலையில், ஆத்திரம் அடைந்த அவர், அம்பை பேருந்து நிலையத்தில் வைத்து ஓட்டுநர் மகேஷை பேருந்துக்குள் புகுந்து அரிவாளால் வெட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்