பஸ் , கார் நேருக்குநேர் மோதி விபத்து - நினைக்கமுடியாத கோரம்.. கரூரில் பயங்கரம்

x

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, தனியார் பேருந்தும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர், காரில் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். குளித்தலை அருகே கள்ளப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரும், எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்