வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை... மர்ம கும்பல் காட்டிய கைவரிசை

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிளஸன்ட் நகரை சேர்ந்தவர் கலைக்குமார். அரசு மருத்துவரான இவர், பணி முடித்து வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டிய நிலையிலேயே இருந்தாலும், பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 80 சவரன் நகை, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. விசாரணையில் மேல்மாடி கதவை உடைத்த கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்