அடுத்தடுத்து கம்பி எண்ணும் `அண்ணனின் விழுதுகள்'..! ரோடு சைடு இம்சைகளுக்கு ரிவிட் போலீசாரின் அதிரடி

x

ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக செல்லும் பைக்கில் சென்ற இளைஞர், அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஆன்லைன் வாயிலாக சென்னை சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி-க்கு புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த துரைராஜை கைது செய்து சிறை​யி​ல் அடைத்தனர். தனது பைக்கை கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்ததுடன், அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்