சொந்த வீட்டிற்கே ஆப்படித்த உடன்பிறப்பு அதிர்ச்சியில் உரைந்த குடும்பம்

x

கோவையில் ஐபிஎஸ் அதிகாரி போல வேடமிட்டு, தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர், கோவையில் போலீசார் உடையில் வந்த மர்மநபர்கள், 500 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்றதாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி போல வேடமிட்டு நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய உதவி ஆணையர் பார்த்திபன், அப்துல் ரசாக்குக்கு சிங்கப்பூரில் இருந்து தேவேந்திரன் என்பவர் வாடிக்கையாக தங்க நகைகளை கொடுத்து வந்ததாகவும், தேவேந்திரனின் சகோதரரான மகேந்திரன் என்பவர் அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். இதற்காக தனது நண்பர் உட்பட 3 பேருடன் சேர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி போல வேடமிட்டு, அப்துல் ரசாக்கிடம் இருந்து தங்க நகைகளை பறித்துச் சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கோவையில் சம்பந்தப்பட்ட நால்வரையும் மடக்கிப்பிடித்து கைது செய்ததாகவும், அவர்களிடமிருந்து 500 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்