BREAKING || திருவாரூரில் நில நடுக்கமா? அதிர்ந்த பூமி.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்

x

BREAKING || திருவாரூரில் நில நடுக்கமா? அதிர்ந்த பூமி.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்

ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த சத்தம்... அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அரசு ஊழியர்கள் பொதுமக்கள். நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் நீதி

திருவாரூர் அருகே விளமல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அரசு மருத்துவக் கல்லூரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் தற்போது திடீரென பயங்கர வெடி சத்தம் போல் கேட்டுள்ளது. மேலும் பயங்கர ஒலியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மருத்துவக் கல்லூரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறி உள்ளனர். நில அதிர்வா? விமானம் ஏதும் விபத்து நடத்திற்குமோ? என பல்வேறு கோணங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஒலியானது திருவாரூர் விளமல், சேந்தமங்கலம் கங்களாஞ்சேரி அடியேக்கமங்கலம் என சுற்றுவட்டார பகுதிகளில் 40 கிலோ மீட்டர் தூரம் இந்த பயங்கர சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இந்த சம்பவம் காட்டு தீ போல் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்