டிரைவர் அடித்த திடீர் பிரேக்... ஒரு நொடியில் பறிபோன கண்டக்டர் உயிர் - சென்னையில் சோகம்

x

டிரைவர் அடித்த திடீர் பிரேக்... ஒரு நொடியில் பறிபோன கண்டக்டர் உயிர் - சென்னையில் சோகம்

சென்னை, பூந்தமல்லி அருகே... தனியார் பேருந்து ஓட்டுநர் அடித்த திடீர் பிரேக்கால், பேருந்துக்குள் இருந்த நடத்துநர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் முருகன். 50 வயதான இவர், தனியார் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்த நிலையில், சம்பவத்தன்று பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற பேருந்தில் பணியில் இருந்துள்ளார். பேருந்தை சகாதேவன் என்பவர் இயக்கிய நிலையில், திடீரென அவர் அடித்த பிரேக்கில், பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த முருகன் கீழே தவறி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்