வெலவெலத்து போன மக்கள்... "மனித ரத்தத்தில் BR..?" - நடுநிசி கும்பல்..? அலறும் அருப்புக் கோட்டை

x

உச்சி சாமி கோயில் 4வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து வாசலுக்குத் தண்ணீர் தெளிக்க வெளியே வந்துள்ளனர்... அப்போது வீட்டு வாசல்களில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்... ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் இருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்... கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு வீட்டில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி ஆர் என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் அது விலங்கு ரத்தமா அல்லது மனித ரத்தமா என்பதைக் கண்டறிய ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதை செய்தது யார்? என்ன காரணத்திற்காக ரத்தம் தெளித்திருக்க வேண்டும்? வெறுமனே பயமுறுத்தவா? அல்லது பில்லி சூனியம் போன்ற ஏதேனும் நம்பிக்கைகளால் இவ்வாறு செய்தார்களா? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்