காந்தி ஜெயந்தியில் கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு..காரணம் என்ன தெரியுமா ?

x

காந்தி ஜெயந்தியான இன்று கடலூர் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கத்தாழை கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதுவரையில் பல கிராம சபை கூட்டங்களிலும் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் எந்த பயனும் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்... மேலும், கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப் படவில்லை என தெரிவித்து, கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலக ஊழியர்களை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை.


Next Story

மேலும் செய்திகள்