சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

x

சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இரவு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதை கண்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது இ.மெயிலில் குறிப்பிட்டது போல கல்லூரி வளாகத்தில் எந்தப் பகுதியிலும் வெடிகுண்டு சிக்கவில்லை. இதனால் அந்த இ.மெயில் செய்தி புரளி என்பது தெரியவந்தது. மடிப்பாக்கத்தில் இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் வந்தநிலையில், தற்போது எம்ஐடி கல்லூரிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டநிலையில், மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்