நள்ளிரவில் வீடுகளில் ரத்த அபிஷேகம்.. அதிகாலை வெளியே வந்ததும் அதிர்ச்சி.. மனித ரத்தமா?.. மரண குறியீடு

x

*அருப்புக்கோட்டையில் வீடுகளின் வாசல்களில் இரத்தம் தெளிக்கப்பட்டதால் பொதுமக்கள்

பீதி அடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டையில் உச்சி சுவாமி கோவில் நான்காவது குறுக்கு தெரு உள்ளது அங்குள்ள வீடுகள் இரத்தம் தெளித்த

நிலையில் உள்ளது.

மேலும் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட ஆட்டோவின் முன்பகுதியிலும் இரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அப்பகுதி மக்கள்

பெரும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பூங்கோதை என்ற மூதாட்டி கூறுகையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால் எங்கள் தெருவின் பின்பகுதியில்

இதேபோல் ஒரு வீட்டில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது நேற்று இரவு நான் ஒரு மணி வரைமுழித்திருந்தேன். அதுவரை யாரும் நடமாட்டம் இல்லை. அதன்

பிறகு இன்று காலை வழக்கம் போல் வாசல் தெளிப்பதற்காக எழுந்து பார்த்தபோது என் வீடு உள்பட சுமார் பத்து வீடுகளில்

ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எனது வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின்முன்பகுதியிலும் இரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது.

இதனை யார் செய்திருப்பார் என்று தெரியவில்லை எதற்காக செய்தார்கள் என்றும் தெரியவில்லை என கூறினார்.

ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி ஆர் இன்று இரவு என்று எழுதியிருந்தது தகவல் அறிந்த நகர் காவல் துறை ஆய்வாளர்

பாலமுருகன் தலைமையில் போலீ சார் இரத்தம்தெளிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.

மேலும் அந்த ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர் இது விலங்குகள் ரத்தமா அல்லது மனித இரத்தமா

என சோதனை செய்து வருகின்றனர்

நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்