தென்பெண்ணை ஆற்றில் கருப்பு நிறத்தில் வரும் நீர் - அதிர்ச்சியில் மக்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளால் தண்ணீர் மாசு அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நச்சுத்தன்மையுடன் கருப்பு நிறத்தில் வரும் தண்ணீரை, விளைநிலங்களில் பாய்ச்சினால், பயிர்கள் மிகவும் பாதிக்கப்படும் என கவலை அடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆறு மாசுபடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்