பாஜக பிரமுகர் பகிரங்க கொலை மிரட்டல்... அதிர வைத்த ஆடியோ... பாய்ந்தது வழக்கு சிவகங்கையில் பரபரப்பு

x

மக்கள் அதிகாரம் அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளராக உள்ள வைகை சரவணன் என்பவர் தங்கள் மாநாட்டிற்காக பாஜகவை விமர்சித்து காளையார்கோயிலில் அரசியல் சுவர் விளம்பரம் எழுதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல்சக்தி , கருப்பையா என்பவர் மூலம் வைகை சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த ஆடியோவும் வெளியானது. இந்நிலையில் வைகை சரவணன் அளித்த புகாரின் பேரில் காளையார் கோயில் போலீசார் மேப்பல்சக்தி , கருப்பையா ஆகிய இருவர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்