100 வாக்குறுதிகள் புத்தகம் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

x

#thiruppur

100 வாக்குறுதிகள் புத்தகம் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்குசேகரித்தார். அப்போது, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தான் செய்யவிருக்கும் 100 வாக்குறுதிகள் குறித்தான புத்தகத்தை இளைஞர்களிடம் கொடுத்து அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.பி.முருகானந்தம், தேர்தலில் வெற்றி பெற்று தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பவானிக்கு ஒரு அரசு கல்லூரியை கொண்டு வருவேன் என்றும், அந்த கல்லூரி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்