Foot Park-ல் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு திடீர் வாந்தி மயக்கம் - உணவகம் Vs இளைஞர்... மாறி மாறி பரபரப்பு புகார்

x

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும் இளைஞர் ஒருவர், சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் ஃபுட் பார்க்கில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார். இதில், கெட்டுப்போன இறைச்சியால் பிரியாணி சமைக்கப் பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், இளைஞருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உணவகம் விளக்கமளித்தது. தங்கள் மீது புகாரளித்திருக்கும் வழக்கறிஞர், அடிக்கடி கடைக்கு வந்து இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு செய்ததாகவும், இந்த முறை இலவசமாக தராததால் அவர் இவ்வாறு நாடகமாடுகிறார் எனவும் குற்றம் சாட்டினர். மேலும், தங்கள் நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அனைத்து சான்றிதழ்களும் முறையாக இருப்பதாகவும், தினம்தோறும் இறைச்சிகளை வெளியேற்றி விடுவதாகவும் கூறிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போலீசாரின் விசாரணையை எதிர்கொள்ள தயார் என்றும் விளக்கமளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்