போதை ஆசாமிகளால் நடந்த விபத்து. நொறுங்கிய பைக், இருவர் படுகாயம்..தப்பியோடியவர்களை பிடித்த பொதுமக்கள்

x

போதை ஆசாமிகளால் நடந்த விபத்து. நொறுங்கிய பைக், இருவர் படுகாயம்..தப்பியோடியவர்களை பிடித்த பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் காரில் வந்துள்ளனர். தாறுமாறாக ஓடிய இந்த காரானது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், இரு சக்கர வாகனத்தில் வந்த பேராம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞரும், குரும்பேரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காரில் வந்த 4 பேரில் 2 பேர் தப்பியோடினர். மீதம் இருந்த 2 பேரை அப்பகுதி மக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது, கோவிந்தராஜ் என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்