பைக் பார்க்கிங் தகராறு..கூலித் தொழிலாளி குத்திக் கொலை... தஞ்சையை நடுங்க வைத்த பயங்கரம் ..

x

தஞ்சாவூர் மேல அலங்கத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் பெயிண்டரான குணசேகரன் என்பவருக்கும் இடையே இருசக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தர்ஷனின் இருசக்கர வாகனத்தை குணசேகரனின் வீட்டின் அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், தர்ஷனுடன் தகராறில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் கத்தியால் தர்ஷனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தர்ஷன், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தர்ஷனின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அரசு உதவி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பார்க்கிங் தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்